பக்கத்து வீட்டு பெண்ணை கொலைசெய்து அவள் இதயத்தை சமைத்து  பரிமாறிய சைக்கோ கொடூரன்!

  • IndiaGlitz, [Thursday,February 25 2021]

அமெரிக்காவில் பரோலில் வந்த குற்றவாளி ஒருவர் மூடநம்பிக்கையின் உச்சத்தால் பக்கத்து வீட்டுப் பெண்ணை கொலை செய்து அவள் இதயத்தை உருளை கிழங்கோடு சேர்த்து சமைத்து தனது குடும்ப உறுப்பினர்களுக்கே பரிமாறி இருக்கிறார். மேலும் பேய் பிசாசை விரட்டுவதற்குத்தான் இப்படி செய்தேன் என விசாரணையில் கூறி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆக்லஹோமா நகரில் வசித்து வந்த பால் ஆண்டர்சன் என்பவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டில் போதைப்பொருள் மற்றும் ஆயுத வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இத்தணைடனைக்காக சிறை சென்றவருக்கு கவர்னர் சமீபத்தில் தண்டனை குறைப்பு செய்து இருக்கிறார். மேலும் கடந்த மாதம் பரோலில் வெளியே அனுப்பவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த பரோல் கொடுக்கும்போதே பால் ஆண்டர்சன் எனக்கு பரோல் வேண்டாம் என நீதிமன்றத்தில் கதறி அழுது இருக்கிறார். ஆனாலும் பால் ஆண்டர்சனை நீதிபதிகள் பரோலில் விட சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

இதனால் பால் ஆண்டர்சன் ஆக்லஹோமாவில் உள்ள தனது அத்தை மாமா வீட்டிற்கு வந்து தங்கி இருக்கிறார். பின்பு மூடநம்பிக்கையில் அதீதப் பற்றுக் கொண்ட இவர் தன் வீட்டில் உள்ள பேய், பிசாசை விரட்ட வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டில் உள்ள 42 வயது பெண்ணை கொலை செய்து அவள் இதயத்தை உருளைக் கிழங்கோடு சமைத்து அதை தனது அத்தை, மாமாவிற்கு பரிமாறவும் செய்து இருக்கிறார்.

இதுவும் போதாது என்று நினைத்த பால் ஆண்டர்சன் முதலில் தன்னுடைய மாமாவை கொலை செய்து இருக்கிறார். அடுத்து அவருடைய குழந்தையையும் தாக்கி கொன்று இருக்கிறார். அதோடு அத்தையின் இரு கண்களையும் கத்தியால் குத்தி காயப்படுத்தி இருக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் இத்தனை வெறிச்செயல்களை செய்த பால் ஆண்டர்சனுக்கு தற்போது மரணத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட இவரை ஹோமிசைட் கொலைகாரன் என்று அமெரிக்கப் பத்திரிக்கைகள் வசைபாடியும் வருகின்றன.

More News

மாலத்தீவில் ஜோடியாக விஷ்ணுவிஷால்-ஜூவாலா கட்டா: வைரல் புகைப்படங்கள்!

விஷ்ணு விஷால் கடந்த சில மாதங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா உடன் டேட்டிங் செய்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும்

ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திய தமிழக அரசு! யாருக்கெல்லாம் பொருந்தும்?

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி இருக்கிறது.

பிக்பாஸ் அர்ச்சனா வீட்டில் நடந்த விசேஷம்: குத்தாட்டம் போட்டு கலந்து கொண்ட ஆரி!

பிக்பாஸ் வீட்டில் அன்பு ஜெயிக்கும் என்று ஆணித்தரமாக கூறி கிட்டத்தட்ட 75 நாட்கள் வரை தாக்குபிடித்தவர் அர்ச்சனா. அவருடைய பாணி சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்

ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை சான்று அவசியம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிட்டால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் என்ற விதிமுறை தற்போது இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஓடிடியில் அதிக திரைப்படங்கள்,

பவர்ஸ்டார் சினிவாசன் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது