close
Choose your channels

கொரோனா முடிந்ததும் என் முதல் வேலை இதுதான்: அஞ்சலி

Tuesday, July 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் என்பதும் இதனையடுத்து அவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய பழைய புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் கொரோனா விடுமுறை நாளில் இருந்து தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சலி.

இந்த நிலையில் அவர் நேற்று ஒரு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ஒரு பெரிய கட்டிடத்தின் முன் ஆட்டம் போடுவது போல் உள்ளது. அதில் அவர் .இந்த கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் முதலில் வெளியே வந்து இதேபோன்று ஆட்டம் போட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் அனுஷ்காவுடன் அஞ்சலி நடித்த ‘நிசப்தம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும், அதனையடுத்து அவர் ’நேர் கொண்ட பார்வை’ தெலுங்கு ரீமேக் படமான ‘வாகேல் சாஹிப்’ படத்திலும் தமிழில் ’காண்பது பொய்’, ’ஓ’, ’பிக்பாஸ்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.