close
Choose your channels

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகளை திருடியது இவரா? அதிரடியாக கைது செய்த போலீசார்..!

Tuesday, March 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் உட்பட வைரங்கள் ஆகியவை காணாமல் போன நிலையில் இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது 60 சகரன் நகைகள் உள்பட ஆபரணங்கள் காணாமல் போனதாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்த 40 வயது ஈஸ்வரி என்பவர் தான் இந்த நகைகளை திருடியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ஈஸ்வரியின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்தபோது அவர் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஈஸ்வரிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் இந்த திருட்டில் மேலும் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.