ஒரு மணி நேரம் அதகளப்படுத்தும் யோகிபாபு: 'பட்டிபுலம்' படம் குறித்து இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,March 15 2019]

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் பட்டிபுலம் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 22ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்திலும் இன்னொரு கேரக்டரில் வீரசமர் என்ற நடிகரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் 'தற்காப்பு' படத்தில் நடித்த அமிதாராவ் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் சுரேஷ் கூறியபோது, 'நான் ஷக்திசிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன். அந்த பார்முலாவின்படி யோகிபாபுவை இந்த பட்டிபுலத்தில் பயன்படுத்தி கொண்டேன். இந்த படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார்.. அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப்படுத்தி இருக்கிறார்.

கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊரில் உள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் இந்த படத்தில் நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம்..

ஆர்.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு வல்லவன் இசையமைத்துள்ளார்.

More News

மாடல் அழகியிடம் மயங்கி குளியலறையில் சிக்கிய நபர்! ஏலகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி உடல்நலக்குறைவாக இருந்ததால் அவர் பாலியல் புரோக்கர் தொழில் செய்யும் சீனு என்பவரின் பழக்கத்தால் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.

சிவகங்கையில் எச்.ராஜா? எதிர்த்து போட்டியிடுபவர் யார்?

தூத்துகுடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்

நாடாளுமன்ற தேர்தல்: ஜெ.தீபா அதிரடி முடிவு

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தும் தனித்து போட்டியிடவும் வியூகம் அமைத்து வருகிறது.

மதுரவாயல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது சென்னை கல்லூரி மாணவியா? திடுக்கிடும் தகவல்

சென்னை மதுரவாயல் அருகே உள்ள ஏடிஎம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஏடிஎம்-இல் பணம் நிரப்பி கொண்டிருந்த ஊழியர்களை கத்தியால் தாக்கி கொள்ளையடித்தனர்.

நியூசிலாந்து துப்பாக்கி சூடு: நூலிழையில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்து நாட்டில் சற்றுமுன்னர் மர்மநபர் ஒருவர் மசூதி ஒன்றில் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும்