close
Choose your channels

கொரோனா வைரசுக்கு தமிழகத்தில் மேலும் ஒரு பலி: குவைத்தில் இருந்து திரும்பியவர்

Thursday, March 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரசுக்கு தமிழகத்தில் ஏற்கனவே மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்த நபர் பரிசோதனை முடிவு வெளிவராத நிலையில், உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயது ஆண் என்பதும், உயிரிழந்த இந்த நபருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த 3ஆம் தேதி குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரது ரத்த மாதிரி சோதனையின் முடிவு வருவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டார். எனவே இவர் கொரோனாவில் தான் இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரிய வரும்

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த 24-ம் தேதி உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 -ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.