close
Choose your channels

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

Sunday, March 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனா இத்தாலி போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிற்குள்ளும் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர்களை பலி வாங்கி வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள முகமது சித்திக் என்ற 76 வயது பெரியவர் முதன்முதலாக கொரோனாவுக்கு பலியான நிலையில் அதனை அடுத்து இந்தியாவில் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பதால் கொரோனாவால் இந்தியாவில் மட்டும் நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியாகி இருக்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் 63 வயதில் பெரியவர் ஒருவர் கொரோனாவால் தாக்கப்பட்டு கடந்த 15 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் பலியாகியுள்ளார். இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 5 இந்தியர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் இவர்கள் அனைவரும் கொரோனாவால் மட்டுமன்றி ஏற்கனவே சர்க்கரை நோய் உள்பட ஒரு சில நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos