சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி பலி: கொரோனாவின் கொடூர முகம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் மக்களை கொரோனாவிடம் இருந்து காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த துறையினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் சென்னையில் ஏற்கனவே ஒரு சில காவல்துறை அதிகாரிகள் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு காவல்துறை அதிகாரி பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி செய்து கொண்டிருந்த குருமூர்த்தி என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மரணமடைந்த காவல்துறை ஆய்வாளர் குருமூர்த்தி அவர்களுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனாவால் பலியான உதவி ஆய்வாளர் குருமூர்த்தி குறித்து ஐபிஎஸ் அதிகாரி நரேஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். காவல்துறை மீண்டும் ஒரு அர்ப்பணிப்பு உள்ள குருமூர்த்தி என்ற ஹீரோவை இழந்து விட்டது. அவரது சேவைக்கு எனது சல்யூட் என்று தெரிவித்துள்ளார்

ஏற்கனவே மாம்பலம் காவல் துறை ஆய்வாளர் பாலமுரளி, சூளைமேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திரையுலகில் இல்லாத விஜயகுமாரின் ஒரே மகள்!: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் குடும்பத்திலுள்ள அனைவருமே கிட்டத்தட்ட திரையுலகில் இருக்கும் நிலையில் அவரது ஒரே ஒரு மகள் மட்டும் திரை உலகிலிருந்து சம்பந்தம் இல்லாமல் இருக்கிறார்

'டாக்டர்' படத்தின் புதிய அப்டேட்: 2 நிமிட வீடியோ வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் 'டாக்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள தங்கக்கடத்தல் விவகாரம்!!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் கொள்ளைச் சம்பவங்கள்!!!

கேரள அரசியலுக்கே உலை வைக்கும் அளவிற்கு தங்கக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்வப்னா சுரேஷ் பற்றிய தேசிய புலனாய்வு முகமை (NIA) தற்போது பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

திருப்பதி ஏழுமலையானுக்கே இந்த நிலைமையா??? பதற வைக்கும் அதிர்ச்சி தகவல்!!!

கொரோனா ஊரடங்கினால் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருமானம் குறைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

வெப்தொடரில் நடிக்கும் சூர்யா: டைட்டில் இயக்குனர் குறித்த தகவல்கள்

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த திரைப்படம் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில்