சென்னையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு காவல்துறை அதிகாரி பலி: அதிர்ச்சி தகவல்


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழக தலைநகர் சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினமும் சுமார் 4000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதும் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இதுவரை தமிழகத்தில் 1200 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில் அதில் 800 க்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்
இந்த நிலையில் சென்னையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்களில் ஒருசிலர் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாம்பலம் காவல்துறை ஆய்வாளர் பால முரளி என்பவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு காவல்துறை அதிகாரி கொரோனாவால் பலியாகியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 57 வயதான இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னையில் கொரோனாவால் இரண்டாவது காவல்துறை அதிகாரி ஒருவர் பலியாகி உள்ளதால் காவல் துறையினர் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments