close
Choose your channels

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தினமும் ஒரு வைல்ட் கார்ட்: இன்று வந்தவர் யார் தெரியுமா?

Friday, March 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதன் பின்னர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக சதீஷ், ரம்யா பாண்டியன் ஆகியோர் வந்ததை பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று வைல்ட்கார்ட் எண்ட்ரியாக தீனா வந்த நிலையில் இன்று மீண்டும் வைல்ட்கார்ட் போட்டியாளராக நடன இயக்குனர் சாண்டி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் வனிதா ஆகிய இருவரும் எவிக்ட் செய்யப்படாமல் எதிர்பாராதவிதமாக வாக்-அவுட் செய்யப்பட்டதை அடுத்து கூடுதலாக வைல்ட் கார்டு போட்டியாளர் வந்துள்ளதாக கூறப்படுகிறது .

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் சண்டையும் சச்சரவுமாக இருந்து வரும் நிலையில் தீனா மற்றும் சாண்டியின் வரவு பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சாண்டி, அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.