ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆன விவசாயி: காரணம் வெங்காயம்

  • IndiaGlitz, [Sunday,December 15 2019]

வெங்காயம் விலை ஏற்றம் காரணமாக வட இந்தியா முதல் தென்னிந்திய வரை கோடிக்கணக்கான மக்கள் படும் சிரமத்தில் இருந்த நிலையில் ஒரு விவசாயி ஒரே மாதத்தில் கோடீஸ்வரனாகி உள்ளார் என்ற அதிசய செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சித்தவனஹல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் வங்கியில் கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்திருந்தார் அவர் வெங்காய அறுவடை செய்த நேரத்தில் திடீரென வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 200 வரை கிடைத்ததால் அவருக்கு பணம் கொட்டியது.

இதற்கு முன்னர் அவர் வெங்காய சாகுபடி செய்த போது கிலோ 30 முதல் 40 வரை மட்டுமே விலை கிடைத்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஐந்து மடங்கு லாபம் கிடைத்தது. இதனை அடுத்து உடனடியாக சுதாரித்த மல்லிகார்ஜுன் மேலும் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதிலும் வெங்காயம் பயிர் செய்தார்.

20 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்ட வெங்காயத்தை அவர் விற்பனை செய்ததில் ஒரே மாதத்தில் அவர் கோடீஸ்வரன் ஆகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல கோடிக்கணக்கான மக்கள் வெங்காயத்தால் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வெங்காய விலை ஏற்றம் ஒரு விவசாயியை கோடிஸ்வரராக மாற்றியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More News

தனுஷின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள 'தலைவர் 168' என்ற படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும்

பி.இ.EEE முடிச்சிட்டு மார்க்கெட்டிங் வேலை பாக்குறேன்: 'வாழ்' படத்தின் அசத்தலான டீசர்

தமிழ் சினிமாவின் 100 ஆண்டுகால வரலாற்றில் இடம்பெறும் படங்களில் ஒன்றாக 'அருவி' இருக்கும் என பல விமர்சகர்கள் பாராட்டிய நிலையில் இந்த படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமனின்

அவர்தான் என் வீட்டுக்கு வரணும்: சச்சின் தேடிய சென்னை தமிழர் பேட்டி

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது டுவிட்டரில் சென்னையில் உள்ள ஒரு தமிழர் தனக்கு ஒரு முக்கியமான டிப்ஸ் கொடுத்ததாகவும் அவரை

மறுமணம் செய்ய விரும்பிய விவாகரத்து ஆன டீச்சருக்கு நேர்ந்த விபரீதம்: 

கணவரை விவாகரத்து செய்த 43 வயது டீச்சர் ஒருவர் மறுமணம் செய்ய விரும்பியபோது ஏற்பட்ட பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'தர்பார்' படத்தில் ரஜினி சொன்ன கரெக்சன்: மீண்டும் படப்பிடிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.