ஆன்லைனில் பிச்சை எடுத்து 17 நாட்களில் லட்சாதிபதியாகிய பெண் கைது!

  • IndiaGlitz, [Wednesday,June 12 2019]

இன்றைய தலைமுறையினர்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் இண்டர்நெட். இந்த இண்டர்நெட் மூலம் பள்ளி மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் மூலம் பெரும்பயன் பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் நன்மைகள் கொட்டிக்கிடக்க்கும் இந்த இண்டர்நெட்டில்தான் ஆபத்தும் முறைகேடுகளும் கொட்டி கிடக்கின்றன. அந்த வகையில் ஆன்லைனில் மற்றவர்களின் பரிதாபத்தை சந்தித்து 17 நாட்களில் ஒரு பெண் லட்சாதிபதி ஆகியுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தான் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்வதாகவும், தன்னுடன் தனது மூன்று குழந்தைகளும் இருப்பதாகவும், குழந்தைகளை வளர்க்க கஷ்டப்படுவதாகவும் தனது நிதியுதவி செய்து உதவி செய்யுமாறும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தனது குழந்தைகளுடன் உள்ள புகைப்படத்தையும் அதில் பதிவு செய்துள்ளார்.

இந்த பெண் மீது இரக்கப்பட்டு பலர் அவருக்கு உதவி செய்துள்ளனர். இவ்வாறாக 17 நாட்களில் அவருடைய வங்கிக்கணக்கில் $50000 நிதியுதவி குவிந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.35 லட்சம் ஆகும். இந்த நிலையில் இந்த பெண்ணின் கணவரின் நண்பர்கள் இந்த பதிவை பார்த்து அவருக்கு தகவல் தந்துள்ளனர். உடனே அவருடைய கணவர் காவல்துறையில் அளித்த புகாரில், தன்னுடைய மனைவி தன்னைவிட்டு பிரிந்து வாழ்வது உண்மையாக இருந்தாலும் மூன்று குழந்தைகளும் தன்னுடன் இருப்பதாகவும், தனது மனைவி ஏமாற்றி பணம் சம்பாதித்து வருவதாகவும் தனது புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், அந்த பெண் தவறான தகவலை கூறி ஆன்லைனில் பணம் பெற்றது உண்மை என தெரிய வந்தவுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

More News

இதுக்கும் அதுக்கும் என்னய்யா சம்பந்தம்? கருணாஸை கலாய்த்த சாந்தனு!

நாடக கலைஞர்களிடம் ஓட்டு கேட்க செல்லும்போது காசு கொடுப்பது குறித்து நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ் கூறிய ஒரு கருத்து குறித்து பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில்

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: நேர் கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே

கிளாப் அடித்து 'கிளாப்' படத்தை தொடங்கி வைத்த இளையராஜா!

கோலிவுட் திரையுலகில் ஏற்கனவே 'தளபதி 63', 'கென்னடி கிளப்' உள்பட ஒருசில ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் இன்று மேலும் ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது

முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி

சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடிகர் ராதாரவி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அமிதாப், அபிஷேக் சுமந்து சென்ற உடல் யாருடையது தெரியுமா?

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும், அவரது மகன் அபிஷேக்பச்சனும் மரணம் அடைந்த ஒருவரின் உடலை இடுகாடு வரை சுமந்து சென்று இறுதிச்சடங்கை  நடத்தியுள்ளனர்.