close
Choose your channels

நானும் தீபிகாவும் மட்டும் தான் சேலை கட்டியிருந்தோம்: கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை பேட்டி

Thursday, May 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டவர்களில் நானும் தீபிகா படுகோனே மட்டும்தான் சேலையில் இருந்தோம் என்று பிரபல நடிகை மற்றும் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் .

கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இதில் தமிழ் திரையுலகினர் உள்பட இந்திய திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே. தமிழ் திரையுலகை பொறுத்தவரை உலக நாயகன் கமல்ஹாசன், இசைப்புயல் ஏஆர் ரகுமான், பார்த்திபன், பா ரஞ்சித், மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் பாலிவுட் திரையுலகில் ஊர்வசி ரெளட்டாலா, தீபிகா படுகோனே உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் நடிகை மற்றும் தயாரிப்பாளர் நமீதா லால். இவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டது குறித்த அனுபவங்களை கூறியபோது, ‘கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்றும் தீபிகா படுகோனேவை சந்தித்து பேசியதாகவும் கூறினார். தீபிகா படுகோனே பிரமாதமான புடவை உடுத்தி அசத்தலாக இருந்தார் என்றும் நானும் புடவையில் தான் இருந்தேன் என்றும் நாங்கள் இருவர் மட்டுமே கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டவர்களில் சேலை கட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தோம் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.