close
Choose your channels

ரஜினிகாந்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறிய அறிவுரை

Wednesday, January 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

சென்னை  - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 43 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 9 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. அதன் நிறைவு விழாவில் துணை முதலமைச்சர்  ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். அங்குள்ள அரங்குகளைப் பார்வையிட்டு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஒ. பன்னீர் செல்வத்திடம் துக்ளக் பத்திரிக்கை விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தைக் குறித்து கேள்வி கேட்கப் பட்டது.

அதற்குப் பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், “தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம். பெரியாரைப் பற்றி பேசுபவர்கள் பெரியாரின் கருத்துகளை முழுமையாகப் படித்து தெரிந்து கொண்டு  பேச வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கை விழாவில் பேசிய ரஜினி பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு நடிகர் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்சியினர் மற்றும் பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் தற்போது துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos