ஓபிஎஸ், சசிகலா குறித்து கமல்ஹாசன் கூறியது என்ன?

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கூறி வருகிறார். அந்த வகையில் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் யார் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று அவர் கூறிய கருத்தை பார்ப்போம்.

எனக்கும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் உள்ளது. தற்போதைய அரசியல் கீழ்த்தரமனதாக இருக்கிறது. நான் பன்னீர் செல்வத்திற்கு நண்பனோ அல்லது எதிரியோ அல்ல. ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் கருவியாக பன்னீர் செல்வம் உள்ளார்.

தமிழக மக்களை போலவே சசிகலாவின் தகுதி குறித்து எனக்கும் தெரியாது. ஒருவர் கூட நீண்ட காலம் இருந்ததற்காக அவருக்கு அரசியலுக்கு வரும் தகுதி கிடையாது.

அரசியல்வாதிகள் மீது எனக்கு கோவம் இருக்கிறது. அரசியல்வாதிகள் ஓன்று கடவுள்கள் அல்ல. மக்களின் எண்ணங்களுடன் அவர்கள் விளையாடக்கூடாது. குதிரை பேரத்திற்கு அனுமதிக்ககூடாது.

பன்னீர் செல்வம் திறமையற்றவர் என்று நான் எண்ணவில்லை. பன்னீர் செல்வத்தை அரசமைக்க அனுமதிக்க வேண்டும்

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

More News

தமிழகத்தை இரண்டாக உடைத்துவிட வேண்டாம். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகவே தமிழக நிலவரம் குறித்து பரபரப்பான கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு பிரச்சனை சமயத்தில் அவரது கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது...

அதிமுக எம்.எல்.ஏக்களின் டெல்லி பயணம் திடீர் ரத்து

தமிழக முதல்வராக சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் கவர்னர் வித்யாசாகர் ராவ் தாமதம் செய்து வருவதால் இதுகுறித்து புகார் அளிக்க அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் டெல்லி சென்று குடியரசு தலைவரிடம் முறையிட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்&

அதிமுக வங்கிக்கணக்கை முடக்க வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்

தமிழக முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று வரை அதிமுகவின் பொருளாளராகவும் இருந்தார். ஆனால் நேற்றிரவு சென்னை மெரீனாவில் ஆழ்ந்த தியானத்திற்கு அவர் அளித்த பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது...

'கபாலி'க்கு பின் 'சி 3' படத்திற்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் &

சேமிப்பு கணக்கில் இருந்தும் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு. ஆர்பிஐ உத்தரவு

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வங்கியின் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது...