சபாநாயகருடன் ஓபிஎஸ் அணியினர் திடீர் சந்திப்பு

  • IndiaGlitz, [Friday,February 17 2017]

தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சிக்கு நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெட்டுப்பு கோர உள்ளார். பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகரின் ரோல் மிகவும் முக்கியம். அவர் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு சரியாக நடக்கும்.

இந்நிலையில் சபாநாயகர் தனபால் அவர்களை ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர்களான மாஃபா பாண்டியராஜன், செம்மலை, பொன்னையன், சண்முகநாதன் ஆகியோர்கள் திடீரென சந்தித்துள்ளனர். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் இந்த திடீர் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நிலைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால் ஒருவேளை 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தால் சபாநாயகர் ஓட்டு போடுவார். அவரது ஒரு ஓட்டு ஆட்சியை முடிவு செய்யும். அந்த நிலை நாளை ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கம். அதிரடி நடவடிக்கை

தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்று கடந்த சில நாட்களாக சசிகலா தரப்பு அணிக்கும், ஓபிஎஸ் தரப்பு அணிக்கும் போட்டி இருந்த நிலையில் நேற்று சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிப்பது நாளை நடக்கவுள&#

என்னை பார்த்து சிரிக்க வேண்டாம். முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தின் முதல்வராக நேற்று பதவியேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றே தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்...

பதவியே போனாலும் பரவாயில்லை. முதல்வருக்கு ஆதரவு இல்லை. ஒரு எம்.எல்.ஏவின் கம்பீர முடிவு

சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவியேற்று கொண்டாலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னர்தான் அவர் பதவி நிலைக்குமா? என்பது தெரியவரும். இந்நிலையில் சசிகலா அதிமுக அணியில் 124 அதிமுக எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறிக்கொண்டாலும் எத்தனை பேர் நாளை முதல்வருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதும்

ஓபிஎஸ் ஆதரவாளர் திடீர் கைது. முதல்வரின் முதல் அதிர்ச்சி நடவடிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசியல் குழப்ப நிலை இருந்த காரணத்தால் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் அனைத்தும் தேங்கி இருந்தன. புதிய முதல்வர் நேற்று பதவியேற்றதால் இனிமேலாவது மக்கள் பணிகள் தொய்வின்றி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது....

ஒரே நாளில் பழிவாங்கும் படலம். நாலரை வருடங்களில் என்னென்ன நடக்குமோ?

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழகத்தில் ஆற்ற வேண்டிய முக்கிய பணிகள் ஆயிரக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் முதல் நாளிலேயே தனது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது....