ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து ஓபிஎஸ் கூறியது என்ன?

  • IndiaGlitz, [Friday,May 19 2017]

நீண்ட வருடங்களுக்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த 15ஆம் தேதியில் இருந்து சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த செய்தியை விட அவர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அரசியல் குறித்த கருத்து கடந்த ஐந்து நாட்களாக டிரெண்டில் உள்ளது. ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கிட்டத்தட்ட அனைத்து தமிழக அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சற்று முன்னர் ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியபோது, 'ரஜினிகாந்த் மிகவும் நல்ல மனிதர், சிறந்த ஆன்மீகவாதி. அவர் அரசியலுக்கு வரலாம், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் அரசியலுக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் தமிழக மக்கள். மக்கள்தான் எஜமானர்கள், அவர்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்' என்று கூறினார்.

ஒபிஎஸ் அணியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி இதுகுறித்து கூறியபோது, 'இன்று ரஜினிகாந்த் தமிழக அரசியல் பற்றி பேசி இருக்கிறார். ஒரு வார்த்தை பேசியதற்கே அவரால் தாங்க முடியவில்லை. அவர் அரசியலுக்கு வந்து பார்க்கட்டும். இங்கு எவ்வளவு சோதனைகள் ஏச்சுகள், பேச்சுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் வந்து பார்க்கட்டும். நடிப்பு தொழிலில் இருந்து அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை அவர் உணர்வார்' என்று கூறினார்.

More News

நான் ஒரு பச்சைத்தமிழன் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதன் முழுவிபரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்றுடன் முதல்கட்ட ரசிகர்களுடனான சந்திப்பு முடிவடைந்தது. ரசிகர்கள் சந்திப்பின் முதல் நாள் ரஜினி பேசிய சில அரசியல் கருத்துக்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பலவதந்திகள் பரவிய நிலையில் இன்றைய கடைசி தினத்தில் அது

'சென்னை 28' நடிகைக்கு ஆண்குழந்தை

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் மகளும், சென்னை 600028', 'அஞ்சாதே' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகையுமான விஜயலட்சுமிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ரஜினி அரசியலுக்கு வரட்டும்! ஆனால் முதல்வர் ஆகக்கூடாது: சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை சந்தித்தபோது இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும், ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் ஆகியோர்கள் குறித்தும் குறிப்பிட்டார். இந்த நிலையில் தன்னை பற்றி புகழ்ந்து பேசிய போதிலும் ரஜினி தமிழகத்தின் முதல்வர் ஆகக்கூடாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான்

சிம்பு குரலில் விஷ்ணு விஷாலின் ஆரம்பமும், முடிவும்!

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணுவிஷால், 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' வெற்றிக்கு பின்னர் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார். தற்போது அவர் 'கதாநாயகன்,', பொன் ஒன்று கண்டேன்', 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்', மின்மினி போன்ற படங்களில் நடித்து வருகிறார்...

புதிய சாதனைக்காக காத்திருக்கும் ஆர்.கே.சுரேஷ்-வரலட்சுமி படம்

பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லனாக நடித்திருந்த ஆர்.கே.சுரேஷ், மற்றும் நாயகியாக நடித்திருந்த வரலட்சுமி ஆகியோர் இணைந்து நாயகன் - நாயகியாக நடிக்கவுள்ள திரைப்படம் 'வர்கம்'. 'பாகுபலி'