close
Choose your channels

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த படம்!

Wednesday, September 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும், வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகத்துக்கு உரிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் பலர் தங்களது திரைப்படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த இரண்டு படங்களை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ’சீதக்காதி’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கிய அடுத்த திரைப்படம் ‘ஒரு பக்க கதை’. இந்த திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் செப்டம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.