close
Choose your channels

யாஷிகாவுக்கு இன்னும் பல சர்ஜரிகள்: அழுதுகொண்டே அப்டேட் கொடுத்த தங்கை!

Monday, July 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவருமான யாஷிகா ஆனந்த் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த போது அவர் வந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் உயிர் தோழி வள்ளிசெட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவும் அவரது 2 நண்பர்களும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் யாஷிகா தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது தங்கை ஓஷேன் ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு யாஷிகாவின் உடல்நிலை குறித்து தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது” யாஷிகாவுக்கான ஒரு சர்ஜரி தற்போது வெற்றிகரமாக கடவுள் புண்ணியத்தில் முடிந்துள்ளது. ஆனால் இன்னும் அவருக்கு நிறைய எலும்பு முறிவுகள் இருப்பதால் அவற்றுக்காக இன்னும் நிறைய சர்ஜரிகள் செய்ய வேண்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போதைக்கு யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவருக்கு இன்னும் நிறைய சர்ஜரி செய்ய வேண்டியுள்ளதால் நீங்கள் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இன்னும் சில நாள் கழித்து மற்ற எலும்பு முறிவுக்காக யாஷிகாவுக்கு சர்ஜரி செய்யப்படவுள்ளது என யாஷிகாவின் உடல்நிலை குறித்து அவரது சகோதரி ஓஷேன் ஆனந்த் அழுதுகொண்டே கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.