'எஸ்கே 23' படத்தின் முதல் நாளே பிரச்சனை? அவுட்டோர் யூனிட் அறிவித்த அதிர்ச்சி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,February 16 2024]

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ’எஸ்கே 23’ படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் இந்த படத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என அவுட்டோர் யூனிட் திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் ’எஸ்கே 23’படத்தின் படப்பிடிப்பை நேற்று தொடங்கிய நிலையில் இந்த படப்பிடிப்புக்கு வெளிமாநில அவுட்டோர் யூனிட்டுகளை பயன்படுத்தியதால் இன்று முதல் எந்த திரைப்படத்திற்கும் சீரியல்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என தென்னிந்திய அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய அவுட்டோர் யூனிட் சங்கம் கூறியபோது, ‘ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தையை மீறி சிலர் செயல்படுவதால் இன்று முதல் எந்த திரைப்படத்திற்கும் சீரியல்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு அவுட்டோர் யூனிட் சங்கம் கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கமல்ஹாசனின் ’தக்ஃலைப்’ படப்பிடிப்பிலும் அவுட்டோர் யூனிட் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் மூன்று நாட்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக அந்த பிரச்சனை முடிந்த நிலையில் தற்போது ’எஸ்கே 23’ படத்திலும் வெளிமாநில அவுட்டோர் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு தென்னிந்திய அவுட்டோர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

More News

கௌதம் மேனனின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! புரமோஷன் பணிகள் தொடக்கம்..!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அவரது இயக்கத்தில் உருவான இன்னொரு

35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்.. நெகிழ்ச்சியான சம்பவத்தை கூறிய நடிகை குஷ்பு!

 நடிகை குஷ்பு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் திரைப்படத்தில் நடித்த நிலையில் மீண்டும் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டதாக நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணி 'ஜெயிலர்' மருமகளுக்கு நேர்ந்த விபரீதம்.. கணவரே கொலை செய்ய முயற்சியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் அவருக்கு மருமகளாக நடித்திருந்த நடிகை மிர்ணா, கர்ப்பிணியாக 'பெர்த் மார்க்' என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின்

வீட்டில் குபேர பொம்மையை எங்கே வைக்க வேண்டும்?

அதிர்ஷ்டம் பெருக குபேர பொம்மையை வீட்டில் சரியான இடத்தில் வைப்பது முக்கியம்.

குரு பகவானின் வியாழக்கிழமை விரதம்: பூரண அருளை பெறுங்கள்!

வியாழக்கிழமை விரதம் என்பது குரு பகவானின் அருளை பெறுவதற்கான ஒரு சிறந்த வழியாகும். இந்த விரதத்தின் மகிமை மற்றும் பலன்களை பற்றி இங்கே காணலாம்.