பெப்சி ஏற்படுத்திய சிக்கல்.. அவுட்டோர் யூனிட் எடுத்த அதிரடி நடவடிக்கை: படப்பிடிப்பு பாதிக்குமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


திரைப்பட படப்பிடிப்பிற்கு அவுட்டோர் படப்பிடிப்புக்கு தேவையான லைட்ஸ், ஜெனரேட்டர், பேந்தர், கிரிப்ஸ் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் "அவுட்டோர் யூனிட்" இன்று முதல் படப்பிடிப்புக்கு யூனிட்டை அனுப்ப மாட்டோம் என கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பெப்சி" அமைப்புடன் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை, படப்பிடிப்பு தளங்களுக்கு அவுட்டோர் யூனிட் அனுப்பப்படாது என்றும், இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், இந்த நடவடிக்கை காரணமாக தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு மட்டும் அவுட்டோர் யூனிட் அனுப்ப மாட்டோம் என அசோசியேஷன் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:
ஆர். கே. செல்வமணி மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் எங்கள் அவுட்டோர் யூனிட்டுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளி மாநில அவுட்டோர் யூனிட்டுகளை தமிழகத்துக்கு வரவழைத்து, அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்றனர்.
தமிழ் திரையுலகை மட்டுமே நம்பி உயிர் வாழும் எங்கள் உறுப்பினர்களின் தொழில் ஆதாரத்தை முடக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுதொடர்பாக பல கூட்டங்கள் நடத்தப்பட்டாலும், இன்று வரை தீர்வு காணப்படவில்லை.
தற்போது தயாரிப்பாளர்களுக்கும் "பெப்சி" பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது. எங்கள் சங்கத்துக்கு எதிராக சில அமைப்புகளை தூண்டிவிட்டு, படப்பிடிப்புக்கு உபகரணங்கள் செல்ல விடாமல் தடுக்கின்றனர்.
பெப்சி தலைமையிலான தவறான வழிகாட்டுதலால், ஒன்றும் அறியாத மொத்த தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகத்தான் எங்கள் அவுட்டோர் யூனிட் அசோசியேஷன், உபகரணங்களை படப்பிடிப்புக்கு அனுப்பாத நடவடிக்கை எடுப்பது என்ற மிக அவசியமான முடிவை எடுத்துள்ளது என அவுட்டோர் யூனிட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com