ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஓவியாவின் ஒற்றை வரி

  • IndiaGlitz, [Monday,September 04 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட ஓவியாவுக்கு ஆதரவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு டுவிட்டர் பதிவுக்கு முன்னணி நடிகர்களின் பதிவுகளை விட அதிக வரவேற்பு இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் ஒரு பதிவை ஓவியா வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதும், வீட்டை விட்டு வெளியே வந்தபின்னரும் தான் ஆரவ்வை உண்மையாக காதலிப்பதாக ஓவியா கூறிவந்தார். ஓவியா ஒரு தவறான நபரை தேர்வு செய்துவிட்டதாக அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தபோதிலும் ஓவியாவின் விருப்பத்திற்கு மரியாதை கொடுத்து ஆரவ்வை இதுவரை கடுமையாக விமர்சனம் செய்யாமல் இருந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் ஓவியா தனது டுவிட்டரில், 'நான் தற்போது சிங்கிளாக இருக்கின்றேன்' என்றும் 'மன திருப்தியுடன் இருக்கின்றேன்' என்றும் அறிவித்துள்ளார். இதனால் அவர் ஆரவ்வின் காதலை மறந்துவிட்டார் என்பது உறுதியாகின்றது. இந்த டுவீட் வந்த மறுநிமிடம் முதல் ஓவியா ஆர்மியினர் ஆரவ்வை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் ஓவியாவின் இந்த ஒற்றை வரி பதிவு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கண்சிமிட்டும் நேரத்திற்குள் லைக்குகளும் ரீடுவீட்டுக்களும் மின்னல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. அனேகமாக இந்த பதிவு உலக அளவில் சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

More News

அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்: நீதிமன்றம் உத்தரவு

வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டினர் உரிமை வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த நடைமுறை செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தவறும் பட்சத்தில் ரூ.500 அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் இதனை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன் சென்ன

கமல்ஹாசனை சந்தித்த பிரபல நடிகை-அரசியல்வாதி

உலக நாயகன் கமல்ஹாசனின் பயணம் கடந்த சில மாதங்களாகவே அரசியல் நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

விஜய்சேதுபதியின் முதல் பெரிய பட்ஜெட் படம் குறித்த அறிவிப்பு

கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர் என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை தனது ரசிகர்களுக்கு அளித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஏற்கனவே சுமார் பத்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது 'இதற்குத்தானா பாலகுமாரா' இயக்குனர் கோகுலுடன் இணைந்து மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சினேகனிடம் ஆவேசமாக வாதாடிய நாடகக்காரி ஜூலி

இன்று காலை புரமோ வீடியோவில் ஜூலியை நாடகக்காரி என்று எந்த நேரத்தில் சுஜா கூறினாரோ, சமூக வலைத்தள பயனாளிகள் இன்று காலை முதல் ஜூலியை அந்த பெயர் சொல்லியே அழைத்து வருகின்றனர்...

ஒரு மணமகன் - இரு மணமகள் திருமணத்தில் திடீர் திருப்பம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் ஒரு மணமகன் - இரு மணமகள் குறித்த  திருமண பத்திரிகை வைரலாகி வந்தது அனைவரும் அறிந்ததே...