close
Choose your channels

இது வெறும் பேப்பர்தான்: கத்தை கத்தையாய் கையில் வைத்திருந்த பணம் குறித்து ஓவியா!

Tuesday, July 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கத்தை கத்தையாக கையில் 500 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு ’இது வெறும் பேப்பர்தான் இதை உங்கள் தேவைக்காக கொடுக்கிறீர்கள்’ என்று நடிகை ஓவியா பதிவு செய்திருக்கும் புகைப்படத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்பது தெரிந்ததே. அவருக்குத்தான் முதல் முதலாக டுவிட்டரில் ஆர்மி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்தார் என்பதும் அந்த படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஓவியா பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஓவியா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் கையில் கத்தை கத்தையாக 500 ரூபாய் நோட்டை வைத்து போஸ் கொடுத்து, ‘இது வெறும் பேப்பர்தான் இவற்றை உங்கள் தேவைகளுக்காக கொடுக்கிறீர்கள்’ என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.