ஆரவ்வுக்காக காத்திருப்பேன்: வெளியேறிய ஓவியாவின் வெகுளித்தனமான பேச்சு

  • IndiaGlitz, [Sunday,August 06 2017]

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிவிட்டதாக நேற்று முன் தினம் மாலையில் இருந்தே செய்திகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அது உறுதியானது. மனநல மருத்துவர் மற்றும் பிக்பாஸ் ஆகியோர்களுடன் ஆலோசனை செய்த ஓவியா, முதலில் மீண்டும் அந்த வீட்டில் தொடர்வதாக கூறினாலும் பின்னர் இறுதியில் வீட்டை விட்டு வெளியேறுவதாக முடிவு செய்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை வெளியேறிய அனைவருமே மற்ற பங்கேற்பாளர்களை கட்டிப்பிடித்து அழுது உணர்ச்சிவசப்பட்டு விடைபெறுவர். ஆனால் அதன்பின்னர் கமல்ஹாசனிடம் அவர்களை பற்றியே குற்றம் சொல்வார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் ஓவியா எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல், சாதாரணமாக வெளியேறினார். வெளியேறும்போது கூட அவர் பொய்யாக நடிப்பதையோ அல்லது பொய்யாக நடிப்பவர்களை காணவோ விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா பின்னர் கமல்ஹாசனுடன் கலந்துரையாடினார். அப்போது கூட வீட்டில் உள்ளவர்களை அவர் ஒரு வார்த்தை கூட குறை சொல்லவில்லை என்பது அவரது மேன்மையான குணத்தை எடுத்து காட்டியது. பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்று டைட்டிலை வெற்றி பெறுங்கள் என்று ஆடியன்ஸ் கூறியபோது, 'உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால் என்னுடைய நலனுக்காக இது நான் எடுத்த முடிவு' என்று கூறினார். மேலும் ஆரவ்வை தான் இன்னும் காதலிப்பதாகவும், அவருக்காக காத்திருக்க போவதாகவும் அவர் தெரிவித்தார்.

More News

ஓவியாவுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய டாஸ்க்? அவ்வளவும் நடிப்பா?

நேற்று மாலையில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சுதான் எங்கு பார்த்தாலும் இருந்தது...

உறுதியானது ஓவியா-கமல் உரையாடல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று உளவியல் சிகிச்சைக்காக வெளியேறிய ஓவியா, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு இன்று அல்லது நாளை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலிக்கு ஆர்த்தியின் அதிரடி பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'உண்மை, உண்மையை தவிர வேறு இல்லை' என்ற கேரக்டரில் ஓவியாவும், 'பொய், பொய்யை தவிர வேறு வார்த்தை எனது வாயில் வராது' என்ற கேரக்டரில் ஜூலியும் கலந்து கொண்டிருப்பது முரண்பாடுகளில் வடிவம் என்றே கூறலாம்.

ஓவியா தற்கொலை முயற்சி குறித்து போலீஸ் புகார்: விரைவில் விசாரணை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா மன அழுத்தம் காரணமாக நேற்று நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற பங்கேற்பாளர்கள் அவரை காப்பாற்றியது போன்ற காட்சியும் நேற்று ஒளிபரப்பானது...

ஓவியா பற்றி கமல் கூறும் புரமோ வீடியோ என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறிய விவகாரம் காரணமாக அந்த சேனலை மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும் ஓவியா ஆர்மியினர் விமர்சனம் செய்து வந்தார்கள்...