close
Choose your channels

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய ஓவியா: என்ன காரணம்?

Saturday, January 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் ஜனவரி 30ஆம் தேதி முதல் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்றும், அதேபோல் ஒரு மணி நேர தொகுப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் குறித்த விபரங்கள் கடந்த சில நாட்களாக ஹாட்ஸ்டாரின் சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுவரை வந்த தகவலின்படி இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், வனிதா விஜயகுமார், தாடி பாலாஜி, ஜூலி, சுஜாவாருணி, அனிதா சம்பத், தாமரை, பாலாஜி முருகதாஸ், சினேகன் மற்றும் அபிராமி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவும் கலந்துகொள்ள இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்த நிலையில் திடீரென அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது. அதற்கு உடல் நலக்கோளாறு காரணம் என்றும் அதனால் ஓவியாவுக்கு பதிலாக அவருக்கு இணையாக பிரபலமாக இருக்கும் ஒருவரை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சேர்க்க பிக்பாஸ் குழுவினர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.