close
Choose your channels

நான் இறந்த வதந்தியை கேள்விப்பட்டு நானே சிரித்தேன்: இயக்குனர் பி.வாசு

Tuesday, January 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த 'பணக்காரன்', 'மன்னன்' , சந்திரமுகி உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் பி.வாசு. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'சிவலிங்கா'

இந்த நிலையில் நேற்று முதல் பி.வாசு இறந்துவிட்டதாக ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வதந்தி அவருக்கே அவரது வாட்ஸ் அப்-இல் வந்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பி.வாசு சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் மீது அன்பு வைத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் வணக்கம். என்னை பற்றிய வதந்தியை நானே கேள்விப்பட்டேன். எனக்கே வாட்ஸ்ஆப்பில் வந்தது. எனக்கு சிரிப்பு வந்தது. நான் இன்று தான் ஜிம்மில் 6 கிலோமீட்டர் நடந்துவிட்டு வந்த பிறகே இந்த நியூஸ் எனக்கு வந்தது. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரே சிரிப்பு வருகிறது. நான் நல்லா இருக்கிறேன், ரொம்ப நல்லா இருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். இந்த வருஷம் 3 படங்கள் இயக்கப் போகிறேன்' என்று பி.வாசு அந்த வீடியோவில் தெரிவித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.