பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 28 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ மற்றும் ’காலா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா. ரஞ்சித் தற்போது ஆர்யா நடித்து வரும் ’சல்பேட்டா’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன் நிறுவனத்தின் மூலம் ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார். அதில் ஒன்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது நீலம் புரொடக்சன் சார்பில் தயாரிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ள மாரி செல்வராஜுக்கு இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ’வர்மா’ என்ற படத்தில் நடித்துள்ள துருவ்விக்ரம் விரைவில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக மாரிசெல்வராஜ் படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'சூர்யா 40' படத்தின் நாயகியான சிவகார்த்திகேயன் பட நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யாவின்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரருக்கு திருமணம்: வைரல் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஒருவருக்கு திருமணம் நடந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

நேற்று திடீரென வானத்தில் தோன்றிய பறக்கும் தட்டு? வைரல் வீடியோ!

நேற்று பாகிஸ்தான் விமானி ஒருவர் வித்தியாசமான வீடியோ ஒன்றை எடுத்து இருக்கிறார். பகல் நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் சூரிய ஒளியைவிட அதிகப் பிரகாசமான ஒரு ஒளி தெரிகிறது.

புது கார், புதிய டிரைவருடன் அரசியலுக்கு வருவோம்: ரஜினியின் அர்ஜூனா மூர்த்தி பேட்டி

இப்போது இருக்கும் அரசியல் கட்சிகள் பழைய கார்கள் போன்றது என்றும் நாங்கள் புதிய கார் புதிய டிரைவருடன் அரசியலில் வலம் வருவோம் என்றும் அர்ஜுனா மூர்த்தி இன்று பேட்டி அளித்துள்ளார் 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிலை, நினைவிடம், நினைவு இல்லம் திறப்பு… தொண்டர்கள் ஆரவாரம்!

தமிழக முதலமைச்சராகவும் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் திறக்கப்பட்டது.