மீண்டும் தள்ளி போகிறதா 'தங்கலான்'? இந்த ஒரே ஒரு காரணம் தான்..!

  • IndiaGlitz, [Sunday,February 04 2024]

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பின் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்த படத்தின் கிராபிக்ஸ் உட்பட ஒருசில தொழில்நுட்ப பணிகள் காலதாமதம் ஆனதன் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ஏப்ரல் மாதமும் இந்த படம் ரிலீஸ் ஆவது சந்தேகம் என்று கூறப்படுகிறது

மீண்டும் ஒருமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதற்கு தொழில்நுட்ப பணிகள் அதிகம் இருப்பதாக காரணமாக சொன்னாலும் உண்மையில் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வரும் காரணத்தினால் படத்தின் ரிலீஸ் செய்து தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே தேர்தல் முடிந்து, ரிசல்ட் வந்தவுடன் தான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே எந்த தேதியில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது என்பதை உறுதியாக சொல்ல முடியும். தற்போது டப்பிங் எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரசிகர்களின் குழப்பத்தை போக்கும் வகையில் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் ஹீரோவான 'வாரிசு' பட நடிகர்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிட்ட 'கோட்' இயக்குனர்..!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் விஜய்யின் சகோதரர்களில் ஒருவராக நடித்த நடிகர் ஷாம், கடந்த 2000 ஆண்டுகளில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார் என்பதும்

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்.. விஜய்யின் இரண்டாவது அறிக்கை

 நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து இருப்பதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்த அறிக்கையை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பா சொன்ன அந்த ஒன்றை கடைபிடிக்கிறேன்: 100 கோடி சம்பாதிக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன் மகள்..!

என் அப்பா சொன்ன அந்த ஒன்றை நான் தொடர்ந்து கடைபிடித்து வருவதால் நான் வருடத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பாதிக்கிறேன் என மறைந்த மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் மகள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பூனம் பாண்டேவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்குமா? அதிர்ச்சி தகவல்..!

நடிகை பூனம் பாண்டே நேற்று முன்தினம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக காலமானார் என்று அவருடைய மேலாளர் அறிவித்த நிலையில் நேற்று திடீரென பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம்

ரஜினிகாந்த் நல்லிணக்கத்திற்காக பேசக்கூடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மத நல்லிணக்கத்திற்காக பேசக்கூடியவர் என்றும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  தெரிவித்துள்ளார்.