close
Choose your channels

இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு ஆண் குழந்தை: வித்தியாசமான பெயர் வைத்த பெற்றோர்

Thursday, March 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன்பின்னர் ’மெட்ராஸ்’ ’கபாலி’ ‘காலா’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ஆர்யா நடித்து வரும் ’சல்பேட்டா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்- அனிதா தம்பதிக்கு இன்று இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அனிதாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த குழந்தைக்கு மிளிரன் என்ற வித்தியாசமான பெயரை பா.ரஞ்சித் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ரஞ்சித்-அனிதா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பா.ரஞ்சித்துக்கு இரண்டாவது குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.