close
Choose your channels

இளையராஜாவை விமர்சித்த அரசியல்வாதியை கண்டித்த பா ரஞ்சித்!

Sunday, April 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த அரசியல்வாதிக்கு பிரபல இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம்தெரிவித்துள்ளார்.

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்பியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த விழாவில் இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது என்றும், தபேலா எடுத்தவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது என்றும், 80 வயதுக்கு மேலாகியும் பெயர் இளையராஜாவாம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவருடைய இந்த விமர்சனத்திற்கு இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது.

பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது என பா ரஞ்சித் விமர்சித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos