இதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ மற்றும் ’காலா’ உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் இயக்குனர் பா ரஞ்சித். இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புரட்சிகரமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திராவிட கட்சிகள் நடத்தி வரும் தலித் அரசியல் குறித்து பா ரஞ்சித் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார். அந்த டுவிட் இதுதான்: அதிகாரத்தின் விளையாட்டை தேவையின் பொருட்டு ஆளுக்கொரு முறையாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆட்டக்காரர்களுக்கு தெரிந்தே இருக்கிறது பலி கொடுக்கப்படவேண்டிய ஆடுகளின் குரல்களை. விடுதலையின் சுவை அறியா ஆடுகளுக்கு பசி தீர்க்கும் புற்களே அமிர்தம் !! ஆகா என்ன சுவை.

இந்த டுவிட்டில் ஆடு, புற்கள் குறித்து நெட்டிசன்கள் சர்ச்சைக்குரிய பொருளை புரிந்து கொண்டு கமெண்ட்டுக்களில் பதிவு செய்தனர். இதனையடுத்து தனது டுவிட்டுக்கு பா.ரஞ்சித் அவர்களே விளக்கம் அளித்துள்ளார். இக்கருத்தை அண்ணன் திருமாவுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை விட்டு விட்டு, எல்லா அரசியல் கட்சிகளும் தலித் மக்களை எப்படி அதிகாரத்திற்க்காக கையாளுகிறார்கள் என்கிற உண்மையை உணருங்கள். ஆடுகள்: தலித் மக்கள் புற்கள்: கட்சிகளின் முழக்கங்கள் மீதான நம்பிக்கைகள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் இந்த இரண்டு டுவிட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

தமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த கொரோனா விடுமுறையில் தமிழ் தெலுங்கு திரைப்படங்களின் பாடல்களுக்கு நடனமாடி அதுகுறித்த வீடியோக்களை

சிரஞ்சீவியின் அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகளுக்கு அவர்கள் வெளியே வந்தவுடன் வாய்ப்புகள் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது

மேலும் ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொரோனா பாசிட்டிவ்! பரபரப்பு தகவல்

இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான். இம்மாநிலத்தில் மட்டும் 47190 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

'சூரரை போற்று' சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்த இளம் நடிகர்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

ஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்

 சூர்யா நடித்த 'மாஸ் என்ற மாசிலாமணி' கார்த்தி நடித்த 'சகுனி' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா சுபாஷ்.