விக்ரமனுக்கு டைட்டில் கிடைக்காததற்கு காரணம் 'பீப்' பிரியாணியா? பா ரஞ்சித்தின் நக்கல் பதில்!

  • IndiaGlitz, [Monday,January 30 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது விக்ரமன் மாட்டுக்கறி சாப்பிட கேட்டதாகவும் அதனால்தான் அவருக்கு பிக்பாஸ் டைட்டில் கிடைக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வரும் நிலையில் இது குறித்த கேள்விக்கு இயக்குனர் பா ரஞ்சித் நக்கலுடன் பதில் அளித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் பிக்பாஸ் இடம் மாட்டுக்கறி மற்றும் மீன் வருவல் சாப்பிட விக்ரமன் கேட்டார். ஏற்கனவே மாட்டு கறி பிரச்சனை குறித்து இந்துத்துவ அமைப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் விக்ரமன் மாட்டு கறி கேட்டதால் தான், அதுவும் மாட்டுப்பொங்கல் அன்று கேட்டதால் தான் அவருக்கு எதிராக அதிக வாக்குகள் விழுந்ததாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.

இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய இயக்குனர் பா ரஞ்சித், ‘எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எந்த உடன்பாடும் இல்லை,ஆனால் அதே நேரத்தில் நான் மாட்டுக்கறி நன்றாக சாப்பிடுவேன், நான் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கிறேன் என்றும் நக்கலாக பதில் கூறினார்.

மேலும் அவர் இந்த பேட்டியில் ’ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்றும் சமூக நீதிக்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது என்றும் குறிப்பாக வேங்கைவயல் பகுதியில் நடந்த சம்பவம் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கையை திமுக அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

More News

'தளபதி 67' படத்தில் சிம்பு தான் மெயின் வில்லனா? லோகேஷ் கொடுத்த ஹிண்ட் இதுதானா?

 விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தை மூழ்கடித்து வருகிறது

பிக்பாஸ் நடிகையின் தாய் புற்றுநோயால் மரணம்.. ஆறுதல் கூறும் திரையுலகினர்!

 பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் மூன்று முறை கலந்து கொண்ட நடிகையின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணம் அடைந்ததாக வெளிவந்த செய்தியை அடுத்து நடிகைக்கு திரையுலகினர்

'சந்திரமுகி 2' கிளைமாக்ஸ் பாடலில் கங்கனா ரனாவத்.. நடன இயக்குனர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படம் கலந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 

கணவர் இறப்புக்கு பின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட மீனா.. உடனிருப்பவர் யார் தெரியுமா?

நடிகை மீனா கணவரின் இறப்புக்கு பின்னர் முதல் முறையாக ஒரு ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்.. ஜோதிகாவின் நெகிழ்ச்சியான பதிவு..!

 ஜோதிகா நடித்து வந்த திரைப்படத்தில் அவரது பகுதியின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் குழுவினர்களிடமிருந்து கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன் என்று அவர் பதிவு செய்திருப்பது பரபரப்பை