'சார்பாட்டா பரம்பரை 2': பா ரஞ்சித் கூறிய ஆச்சரிய தகவல்!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலரது நடிப்பில் உருவான ’சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டினர் என்பதும் அதேபோல் அரசியல்வாதிகளும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மாபெரும் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வரும் நிலையில் ’சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் வைக்க முடியாத சில விஷயங்களை முன் கதையாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ’சார்பாட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை 1925ஆம் ஆண்டு ஆரம்பிப்பது போல் இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த படத்தை வெப்தொடர் அல்லது திரைப்படமாக எடுக்கும் எண்ணம் உள்ளது என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்

’சார்பாட்டா பரம்பரை’ இரண்டாம் பாகத்தில் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் யாராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு: இயக்குனர் தங்கர்பச்சான் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள்!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் உத்தரவின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தங்கர் பச்சானின் வீட்டிற்கு சென்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திடீரென இந்திய அளவில் டிரெண்டான பிக்பாஸ் ஷிவானி: காரணம் இதுதான்!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஷிவானி நாராயணன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அது மட்டுமின்றி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான

கொரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுக்கும் முதல் நடிகர்! - சிரிஷுக்கு கிடைத்த பெருமை

திரையுலகைச் சேர்ந்த பலர் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த போதிலும் முதல்முறையாக தமிழ் நடிகர் மெட்ரோ சிரிஷ், தடுப்பூசியை இலவசமாக வழங்கி உள்ளார்.

பகத்பாசில் பிறந்தநாளுக்கு 'விக்ரம்' இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது என்பது தெரிந்ததே

சிம்புவால் தான் பிரச்சனையா? தயாரிப்பாளர் - பெப்சி மோதல் குறித்து ஆர்கே செல்வமணி அறிக்கை!

சிம்பு நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாகத்தான் பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இடையே பிரச்சனை வந்ததாக கூறப்படும் நிலையில்