கிரிக்கெட் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அஃப்ரிடிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். “கடந்த வியாழக் கிழமை முதல் எனக்கு உடல் மோசமாக வலித்தது. நான் கொரோனா பரிசோதனை செய்தேன். துருதிஷ்டவசமாக எனக்கு தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் மீண்டு வர உங்களின் பிரார்த்தனை தேவை... இன்ஷா அல்லாஹ்” எனப் பதிவிட்டுள்ளார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷாபர் ரஹ்மான் விளையாடிய கிரிக்கெட் பேட்டை 2000 ஆம் டாலருக்கு ஏலத்தில் எடுத்து இருந்தார். இச்செயலுக்கு ஐசிசி பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தது. கடந்த 2 மாதங்களாக ஊரடங்கினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மளிகைப் பொருட்களையும் நிவாரணத் தொகைகளையும் வழங்கி வந்தார் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் ஜுன் 11 ஆம் தேதி தனக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். பாகிஸ்தானில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் விளையாட்டு வீரர்களில் இவர் 3 ஆவது நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக தவ்ஷ்பீக் உமர் மற்றும் ஜாபர் சர்பாஸ்க்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதை அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

More News

கொரோனா தடுப்பூசிகளின் தற்போதைய நிலவரம் என்ன??? எப்போது சந்தைக்கு வரும்???

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன.

விஜய், சூர்யாவுக்கு நெருக்கமானவர் திடீர் மரணம்: திரையுலகம் அதிர்ச்சி

விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு நெருக்கமானவர் திடீரென மரணம் அடைந்து விட்டதாக வெளிவந்த செய்தியால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அமெரிக்கா: இனவெறிக்கு எதிரான போராட்டங்களுக்கு நடுவில் நடந்த கொள்ளைச் சம்பவங்கள்!!!

அமெரிக்காவில் மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா??? WHO என்ன சொல்கிறது!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்

வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்.. அமெரிக்காவையே தில்லாக எச்சரித்த  நாடு!!!

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை அமைதியாக நடத்த வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்