போரில் வென்றால் அந்த நடிகை எனக்கு தான்.. பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேச்சு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல பாலிவுட் நடிகையின் பெயரை குறிப்பிட்டு, பாகிஸ்தான் போரில் வென்றால் அந்த நடிகை எனக்கு தான் என மதகுரு ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், இந்தியா போருக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்பட்டால், இந்தியாவிடம் பாகிஸ்தான் அதிகபட்சமாக நான்கு நாட்கள் கூட சமாளிக்க முடியாது என்று வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த போரால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது, ஆனால் பாகிஸ்தான் மிக மோசமான பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், போரில் தோல்வி உறுதி என்று தெரிந்தும் பாகிஸ்தான் "நாங்கள் பதிலடி கொடுப்போம்" என்று வீராவேசமாக பேசி நாடகமாடி வருகிறது. மேலும் பாகிஸ்தானில் உள்ள சில பிரபலங்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த மதகுரு ஒருவர், "இந்தியாவுக்கு எதிரான போரில் மட்டும் பாகிஸ்தான் வென்றுவிட்டால், நடிகை மாதுரி தீட்சத்தை எடுத்துக் கொள்வேன்" என கூறியுள்ளார். அவரது கருத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
இந்தியாவுடன் மோதி போரில் வெல்வது என்பது கனவில் கூட முடியாது என்ற நிலை இருந்தும், பாகிஸ்தான் மதகுரு இவ்வாறு பேசி இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments