விசாவை தவறவிட்ட இந்திய மாணவி.. தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த பாகிஸ்தான் ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு..!

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

துபாயில் யு.கே. மாணவர் விசாவை இந்தியப் பெண் காரில் தவறவிட்டார். அவரைத் தேடிச் சென்று விசாவை ஒப்படைத்த பாகிஸ்தான் ஓட்டுனருக்குப் பாராட்டுகள் குவிந்தன.

இந்திய - பாகிஸ்தான் நாடுகள் இடையே பதற்றமான சூழல் பரவலாக நிகழும்போதெல்லாம் அவ்வப்போது நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறிவிடும். அவ்வாறான சம்பவம் ஒன்றுதான் துபாயில் நடந்துள்ளது.

இதுகுறித்து அரபு ஊடகங்கள், “இந்தியாவைச் சேர்ந்தவர் ரேஞ்சல் ரோஸ். இவர் தனது நண்பர் ஒருவரின் பிறந்த நாளில் கலந்து கொள்வதற்காக முடாசர் காதிம் ( பாகிஸ்தானைச் சேர்ந்தவர்) என்ற ஓட்டுநரின் காரில் ஏறினார். அப்போது மற்றொரு நண்பரை வேறோரு காரில் பார்த்தவுடன், ரோஸ் தான் ஏறிய காரை விட்டு தனது நண்பர் இருந்த காரில் சென்றார். இந்த நிலையில் தனது பர்ஸை தான் ஏறிய முந்தைய காரிலேயே தவறவிட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், காதிம் தனது காரில் பயணி ஒருவர் பர்ஸைத் தவறவிட்டதைக் கண்டார். அந்த பர்ஸில் பணம், ஐக்கிய அரபு அமீரக ஓட்டுநர் உரிமம், யுகே சென்று படிப்பதற்கான மாணவர் விசா போன்ற பல முக்கிய ஆவணங்கள் இருந்தன.இதனைத் தொடர்ந்து பர்ஸில் இருந்த பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த காதிம், சாலை போக்குவரத்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இதுகுறித்துக் கூறினார். அதிகாரிகள் உதவி செய்ய, ரோஸின் இல்லத்துக்குச் சென்று நேரில் பர்ஸை வழங்கினார் காதிம்.

மாணவர் விசாவைப் பத்திரமாகச் சேர்த்ததற்காக ரோஸின் தாயார் காதிமுக்கு நன்றி தெரிவித்தார். இந்திய மாணவிக்கு உதவிய பாகிஸ்தானின் கார் ஓட்டுநருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன.

More News

பிரதமர் மோடியின் CAA கருத்துக்கு பதில் கூற முடியாது.. நாங்கள் அரசியல் மற்றும் மதச்சார்பற்றவர்கள் - ராமகிருஷ்ண மடம்..!

'பிரதமரின் பேச்சு குறித்து நாங்கள் கருத்தேதும் தெரிவிக்க முடியாது. நாங்கள் முற்றிலும் அரசியலற்ற அமைப்பு. இங்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்'"

என் வயது முக்கியமில்லை.. மக்களுக்காக நான் செய்யும் பணி தான் முக்கியம்..! அமித்ஷாவுக்கு ம.பி முதல்வர் பதிலடி.

நாங்கள் எங்கள் பணிகளை நம்புகிறோம். வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதில்லை. மக்கள் என் பணியைத்தான் பார்க்கிறார்களே தவிர, என் வயதை இல்லை.

கேபிள் டிவியில் ஒளிபரப்பான 'தர்பார்': அதிர்ச்சியில் படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கடந்த நான்கு நாட்களில் 128 ரூபாய் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இதை மட்டும் என்னை யாராலும் செய்ய வைக்க முடியாது: வெற்றிமாறன்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படத்தின் நூறாவது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

'அசுரன்' பட விழாவில் கிண்டலடிக்கப்பட்ட விஜய்: நாகரீகமாக நடந்து கொண்ட தனுஷ்!

தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.