ஒரே நாளில் பழிவாங்கும் படலம். நாலரை வருடங்களில் என்னென்ன நடக்குமோ?

  • IndiaGlitz, [Friday,February 17 2017]

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழகத்தில் ஆற்ற வேண்டிய முக்கிய பணிகள் ஆயிரக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் முதல் நாளிலேயே தனது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

நாளை அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால்தான் முதல்வராக தொடர முடியும் என்ற நிலையில் பதவியேற்ற மறுநாளே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தங்கியிருந்த வீட்டை காலி செய்யும் படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வரும் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் உடனடியாக வீட்டை காலி செய்ய சொல்லி பொதுப்பணித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. பொதுப்பணித்துறையும் முதல்வர் வசம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக காலி செய்யாத பட்சத்தில் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவு நீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறதாம்.

பதவியேற்ற ஒரே நாளில் தனது பவரை முதல்வர் காண்பிப்பாதால் இன்னும் நான்கரை ஆண்டில் என்னென்ன நடக்குமோ என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.

More News

சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தொலைக்காட்சியில் இருந்து திரையுலகிற்கு வந்து ஐந்தே வருடங்களில் பத்தே படங்களில் மட்டும் நடித்து ஒரு நடிகர் முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்துவிட்டார் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்

எனது அடுத்த படத்தில் சசிகலாவின் உண்மை முகம். பிரபல இயக்குனர்

உண்மை நிகழ்வுகளையும் சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் குறித்தும் திரைப்படம் எடுக்கும் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, சசிகலா குறித்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்...

சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினி பட டைட்டிலா?

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், ஜெயம் ராஜா இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் இன்று மதியம் 12 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது...

தமிழ்நாட்டில் இப்போதுதான் பிரச்சனை தொடங்கியுள்ளது. நடிகை ஸ்ரீபிரியா

தமிழகத்தின் 13வது முதல்வராக நேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். நாளை கூடவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

பத்தாம் வகுப்பை கூட பாஸ் செய்யாத சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக முதல்வராக பதவியேற்று மக்களின் மனங்களை வென்ற ஓபிஎஸ் அவர்களை திடீரென ராஜினாமா செய்ய வைத்து, முதல்வர் பதவியில் அமர முயன்ற சசிகலாவுக்கு விதி ஜெயில் பாதையை வழிகாட்டிவிட்டது. இதனால் அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தற்போது முதல்வராகியுள்ளார்...