ட்ரோன் மூலம் போதை வஸ்து விற்பனை செய்த இருவர் கைது!

  • IndiaGlitz, [Monday,April 13 2020]

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த 20 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மதுக்கடைகள் மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை செய்யும் கடைகள் கடந்த மூன்று வாரங்களாக மூடப்பட்டதால் மதுவிற்கும் போதைக்கும் அடிமையான பலர் தற்போது செய்வதறியாமல் திண்டாட்டத்தில் உள்ளனர்

இந்த நிலையில் போதை வியாபாரிகள் டெக்னாலஜி மூலம் பான்மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளை விற்பனை செய்து வந்தது தற்போது தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மோர்பி என்ற பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் இருந்து ட்ரோன் மூலம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு பான்மசாலா உள்பட போதை வஸ்துக்கள் சப்ளை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

வீட்டில் மாடியில் நின்று கொண்டிருந்த நபர்கள் டிரோனில் இருந்து பான்மசாலா பெற்றுக்கொண்டு அதிலேயே பணத்தையும் வைத்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி வைரல் ஆனதை அடுத்து போதை வஸ்து விற்பனை செய்தவர் மற்றும் ட்ரோன் ஆப்பரேட்டர் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பது உள்பட பல்வேறு உதவிகளை காவல்துறையினர் செய்து வரும் நிலையில் போதை வியாபாரிகள் இதனை தங்களுடைய வியாபாரத்திற்கு பயன்படுத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

கொரோனா எதிரொலி: தளபதி விஜய்யின் மிகப்பெரிய மனவருத்தம்

கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் ஆட்டுவித்து வரும் நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து திரை நட்சத்திரங்களும் தங்களுடைய

கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த கேரள காவல்துறை

உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமலஹாசன் தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய

கொரோனாவுக்கு எதிரான போரில் களமிறங்கும் பிக்பாஸ் ஜூலி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராளி என்பதால் ஆரம்பத்தில் இவர் மீது நல்ல மரியாதை இருந்தது.

தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக தீவிரமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர்களுக்கு

அசந்து தூங்கியவரை பிணம் என நினைத்து தகனம்: 15 வினாடிகளில் சாம்பலான கொடுமை

அமெரிக்காவில் அசந்து தூங்கிய இறுதிச் சடங்கு செய்யும் ஊழியர் ஒருவரை தெரியாமல் தகனம் செய்ததால் 15 நொடிகளில் சாம்பலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது