துணை முதல்வருடன் பாண்டவர் அணி சந்திப்பு:
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்க தேர்தலை நாளை நடத்தலாம் என்றும், ஆனால் தேர்தலில் பதிவான வாக்குகள் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை எண்ணக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில் நாளை திட்டமிட்டபடி தேர்தலை நடத்த நடிகர் சங்க நிர்வாகிகள் தீவிர முயற்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களை பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், ராஜேஷ், லதா, சச்சு ஆகியோர் சற்றுமுன் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பில், 'நாளை நடக்கவிருக்கும் நடிகர் சங்க தேர்தல் நியாயமாக நடைபெறவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் துணை முதல்வரிடம் அவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.
நடிகர் சங்கம் என்பது ஒரு அமைப்பு, அந்த அமைப்பின் தேர்தலில் தமிழக அரசு தலையிடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருக்கும் நிலையில் துணை முதல்வருடன் பாண்டவர் அணியினர் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments