மீண்டும் பாண்டவர் அணி கையில் நடிகர் சங்கம்: வெற்றி கொண்டாட்டம்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாண்டவர் அணி முன்னிலையில் இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பாண்டவர் அணியில் உள்ள வேட்பாளர்கள் முழுமையாக வெற்றி பெற்றுள்ளனர்.

நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி மற்றும் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் பாண்டவர் அணியின் கைக்கு நடிகர் சங்கம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடுவில் மீண்டும் பாண்டவர் அணி பொறுப்புக்கு வந்துள்ள நிலையில் நடிகர் சங்க கட்டிட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று விரைவில் திறப்பு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.