கூவத்தூர் சென்ற பாண்டியராஜன் தடுத்து நிறுத்தம்.

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

சசிகலா ஆதரவு தரப்பி எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய விருப்பத்தின் பேரிலே இருப்பதாகவும் இருவிதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிஎஸ் கூவத்தூருக்கு நேரடியாக சென்று அதிமுக எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் கூவத்தூருக்கு அமைச்சர் பாண்டியராஜன், பொன்னையன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களை கோவளம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கூவத்தூரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக எம்.எல்.ஏக்களை சந்தித்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அதனால் போலீஸார் இதனை அனுமதிக்க கூடாது என்றும் சசிகலா ஆதரவு தரப்பு எம்.எல்.ஏக்கள் போலீசார்களை கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

கூவத்தூரில் 144 தடை உத்தரவு. போலீசார் அதிரடி

கூவத்தூரில் சசிகலா ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதும், அவர்களுடன் சசிகலா ஆலோசனை செய்து கொண்டிருப்பதும் தெரிந்ததே

யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி? முதல்வர் நாற்காலி கிடைக்குமா?

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதலமைச்சர் ரேஸில் இருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார்.

சுந்தர் சியின் கனவுப்படம் 'சங்கமித்ரா'வின் நாயகி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார் என்பது அறிந்ததே.

மேல்முறையீடு செய்வோம். தம்பித்துரை

சசிகலா உள்பட மூவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சசிகலா ஆஜராக வேண்டிய நீதிபதி பெயர் அறிவிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பை இன்று காலை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் உடனே ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.