close
Choose your channels

பங்குனி உத்திரம் 2025 - முருகனை வழிபடும் முறை, சிறப்புகள் மற்றும் பரிகாரங்கள்

Tuesday, April 8, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பங்குனி உத்திரம் என்பது முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்வதும், காவடி எடுப்பதும், முருகரை வழிபடுவதும், திருக்கல்யாணத்தை தரிசிப்பது போன்ற பல சிறப்புகளைக் கொண்ட ஒரு முக்கியமான நாளாகும். பங்குனி உத்திரம் ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதையும், அன்று நாம் எப்படி இறைவனை வழிபட வேண்டும் என்பதையும் இங்கே விரிவாகக் காணலாம்.

இந்த செய்தி ஆன்மீககிளிட்ஸ் சேனலில் வெளியான ஒரு வீடியோவில் ஜோதிடர் அருண் கார்த்தி அவர்கள் பங்குனி உத்திரம் 2025ன் சிறப்புகளைப் பற்றியும், முருகப்பெருமானின் அவதார மகிமையைப் பற்றியும் பேசிய தகவலின் அடிப்படையில் எழுதப்பட்டது.

பங்குனி மாதம் பௌர்ணமி திதியும், உத்திர நட்சத்திரமும் சேரும் நாளே பங்குனி உத்திரம் ஆகும். இந்த நாளில் தெய்வீக திருமணங்கள் அதிகம் நடைபெற்றதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவன் - பார்வதி திருமணம், முருகன் - தெய்வானை திருமணம், ராமர் - சீதா திருமணம், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம் போன்ற பல திருமணங்கள் இந்த பங்குனி உத்திர நாளில் தான் நடைபெற்றன. எனவே, பங்குனி உத்திரத்தில் இறைவனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். குறிப்பாக, திருமணம் ஆக வேண்டி காத்திருப்பவர்களும், திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளவர்களும், வீட்டில் சுப காரியங்கள் நடைபெற வேண்டி இருப்பவர்களும் இந்த நாளில் முருகப் பெருமானை வழிபடலாம்.

உத்திர நட்சத்திரத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. உத்திர நட்சத்திரம் சூரியனின் நட்சத்திரம் ஆகும். சூரியனின் வீட்டில் வரும் ஒரே நட்சத்திரம் உத்திரம் தான். சூரியன்தான் எல்லா ஆற்றலுக்கும் மூலம் என்பதால் இந்த நட்சத்திரத்திற்கு தனிச்சிறப்பு உள்ளது.

2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் வருகிறது. அன்று முருகனை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

  • கோயிலுக்கு சென்று ஆலய தரிசனம் செய்து திருக்கல்யாணத்தை தரிசிக்க வேண்டும்.

  • முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கித் தர வேண்டும். குறிப்பாக, வில்வப் பொடியால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள். மேலும், கரும்புச் சாறு கொண்டு முருகப்பெருமானை அபிஷேகம் செய்யுங்கள்.

ஏனெனில், நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவதற்கு காரணம் நமது negative கர்மாதான். கிரக பெயர்ச்சிகள் வருடந்தோறும் நடந்தாலும், சிலருடைய வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டங்கள் இருக்கும். 10 வருடம், 15 வருடம் ஏன் பிறந்ததில் இருந்தே கஷ்டப்படுபவர்களும் உண்டு. கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும், தசாபுத்திகள் சிறப்பாக இருந்தாலும் பலன் கிடைக்காததற்கு காரணம் கர்மா. எனவே, இந்த கர்மா நீங்க பங்குனி உத்திர நாளில் முருகப் பெருமானுக்கு வில்வப் பொடி மற்றும் கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்யுங்கள்.

மேலும், பித்தளை முருகர் வேல் வாங்கி, அந்த பங்குனி உத்திர நாளில் முருகப்பெருமான் பாதத்தில் வைத்து, அதை எடுத்துட்டு போய் வீட்டில் வைத்து வழிபடுங்கள். வீட்டில் சாமி ரூமில் வைத்து தினமும் தீப தூபங்கள் காட்டுங்கள். உங்கள் வாழ்க்கையில் வேல் என்பது வெற்றியை குறிக்கும். எனவே, வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்க இந்த வேலை பங்குனி உத்திர நாளில் வைத்து எடுத்துச் செல்லுங்கள்.

இழந்த ஒரு விஷயம் மீண்டும் கிடைக்க பங்குனி உத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

பொருள் தொலைந்து போயிருந்தால் அது திரும்ப கிடைக்க, பல்க் மணியை ஷேர் மார்க்கெட்டில் விட்டு பணம் இழந்தவர்கள், சொந்த வீடு ஏலத்தில் போயிருந்தால் அல்லது விற்று கடன் அடைத்தவர்கள், வேலை இழந்து தவிப்பவர்கள், காதலன் காதலி பிரிந்து போயிருந்தால், நண்பர்கள் பிரிந்து போயிருந்தால், பிசினஸ் நஷ்டமடைந்திருந்தால், இப்படி இழந்த ஒரு விஷயத்தை மீண்டும் பெற பங்குனி உத்திர நாளில் முருகப்பெருமான் ஆலயத்தில் அங்க பிரதட்சணம் செய்யுங்கள். ஆண்கள் பச்சை கலர் சட்டை, பச்சை கலர் வேட்டி அணிந்தும், பெண்கள் பச்சை கலர் சாரி அணிந்தும் அங்க பிரதட்சணம் செய்யுங்கள். நீங்கள் என்ன இழந்தீர்களோ அதை பெறுகிறேன் என்று முருகப் பெருமானை வேண்டிக்கொண்டு இந்த அபிஷேகத்தையும், அங்க பிரதட்சணத்தையும் செய்யுங்கள்.

இந்த உத்திர நட்சத்திரத்தில் நீங்கள் இதைச் செய்து முடித்த பிறகு, உடனடியாக உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியை நீங்கள் பார்க்கலாம். ஒருவேளை உங்களால் இந்த பங்குனி உத்திரத்தில் செய்ய முடியாவிட்டால், எப்பொழுது உத்திர நட்சத்திரம் வருகிறதோ, அப்போதிலிருந்து நீங்கள் இதை செய்ய ஆரம்பிக்கலாம். கலியுகக் கடவுள் முருகன். கலி தீர வேண்டுமென்றால் முருகப் பெருமானை வழிபட வேண்டும். சித்தர்களுக்கு எல்லாம் சித்தர் முருகப் பெருமான். இந்த உலகத்தில் இருக்கிற கலியை நீக்கவே முருகப் பெருமான் அவதரித்தார். எனவே, முருகப்பெருமான் ஆலயத்தில் இந்த வழிபாடுகளை செய்து, பங்குனி உத்திர நாளில் சிறப்பாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

என்னதான் நாம் வழிபாடு, பரிகாரம் எல்லாம் செய்தாலும், நம் வாழ்க்கையிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். நேர்மை, உண்மை, நியாயத்துடன் இருக்க வேண்டும். கடினமாக உழைக்கவும் தயாராக இருக்க வேண்டும். உங்கள் தவறுகளை உணர்ந்து, இனிமேல் நான் சரியாக இருந்து கொள்கிறேன் என்று முருகப் பெருமானை வேண்டிக்கொள்ளுங்கள். இவ்வளவு நாள் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது, இனிமேல் நான் இதை திருத்த எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் முருகா என்று வேண்டுங்கள். இந்த பங்குனி உத்திர நாளில் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்யுங்கள். முருகப் பெருமானுக்காக விரதம் இருங்கள். கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற முருகப் பெருமான் பாடல்களை அதிகமாகப் பாடுங்கள்.

கிரக சஞ்சார சூழ்நிலைகள் எல்லாம் தற்போது சிறப்பாக இல்லை. சனி பெயர்ச்சியும் கூட அவ்வளவு சிறப்பாக இல்லை. அடுத்து நடக்கக்கூடிய ராகு கேது பெயர்ச்சிகளும், குரு பெயர்ச்சிகளும் நிறைய negative-ஆன ஸ்தானங்களுக்கு கிரகங்கள் போகின்றன. எனவே, கிரக சப்போர்ட் நமக்கு கிடையாது. வழிபாடு மூலமாகத்தான் நாம் இதை சரி செய்து நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். எனவே, நான் சொன்ன விஷயங்களை இந்த பங்குனி உத்திர நாளில் செய்யுங்கள். வாழ்க்கையில் முன்னேறி வெற்றி பெறுங்கள்.Aanmeegaglitz Whatsapp Channel

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos