ஆளுனரை சந்திக்கின்றனர் பன்னீர்செல்வம்-பழனிச்சாமி அணிகள்

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

கடந்த சில நாட்களாக ஆட்சி அமைப்பது யார் என்ற பரபரப்பான நிகழ்வுகளுக்கு இன்று அல்லது நாளை முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் போட்டியில் இருந்த சசிகலா சிறைக்கு சென்றுவிட்டதால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் ஆளுனரின் அழைப்புக்காக காத்திருந்தன.

இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அவரது ஆதரவு அமைச்சர்கள் 10 பேர்களும் இன்று இரவே ஆளுனரை சந்திக்கவுள்ளனர். இருவரையும் சந்தித்த பின்னர் ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்கள் இன்று இரவோ அல்லது நாளையோ தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 118க்கும் அதிகமான எம்.எல்.ஏக்களின் கையெழுத்துகளுடன் வந்தால் ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்படும் என கவர்னர் தரப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் அனுப்பியதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் எம்.எல்.ஏக்களின் கையெழுத்துகளுடன் கூவத்தூரில் இருந்து பழனிச்சாமி சென்னை வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

More News

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட 10,711.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் சற்று முன் பெங்களூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரண் அடைந்தனர்

சுதாகரன் மனு நிராகரிப்பு. அரை மணி நேரத்தில் சரண் அடைய உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் சற்று முன்னர் சரண் அடைந்த நிலையில் சுதாகரன் மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி நாளை சரண் அடைவதாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

சரண் அடைந்தார் சசிகலா. இன்று முதல் 4 வருடங்களுக்கு ஜெயில் வாழ்க்கை

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, உச்சநீதிமன்ற உத்தரவின்படி சற்று முன்னர் பெங்களூர் பரப்பன அக்ராஹர நீதிமன்றத்தில் நீதிபதி முன்னர் சரண் அடைந்தார். அவருடன் இளவரசி மற்றும் சுதாகரனும் சரண் அடைந்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இன்று முதல் 4 வருடங்களுக்கு மூவரும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்...

கூவத்தூர் எம்.எல்.ஏக்களுக்கு விடுதலையா? உள்ளே நுழைந்தது அதிரடிப்படை

அதிமுக எம்.எல்.ஏக்கள் 100க்கும் மேற்பட்டவர்களை சசிகலா தரப்பு அணி கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சசிகலா சரண் அடைய பெங்களூரை நோக்கி சென்றுவிட்டார். இந்நிலையில் அவர் சென்ற சிலமணி நேரங்களில் எம்.எல்.ஏக்களுக்கு விடுதலை கிடைக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது...

சிறையில் சசிகலா: ஊதுபத்தி தயாரிக்கும் வேலை. தினசரி சம்பளம் ரூ.50

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய தற்போது சென்று கொண்டிருக்கின்றார். இந்நிலையில் சிறையில் அவருக்கு வழங்கப்படும் உணவு, மற்றும் பிற வசதிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது....