close
Choose your channels

முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின்… ஓபிஎஸ் கருத்து!

Tuesday, March 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக சட்டச்சபைத் தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதுவரை பாமகவிற்கு ஒதுக்கி இருக்கும் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட்ட அதிமுக தலைமை நாளை பாஜகவின் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது வரவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் எப்படியும் முதல்- அமைச்சர் ஆகிவிடலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என்றும் கருத்துக் கூறியுள்ளார்.

மேலும் கூட்டணி நிலைப்பாடு குறித்து பிறகு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துக் கொண்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய ஓபிஎஸ் பின்னர் கார் மூலம் தேனிக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பாஜகவுன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக இருகட்டப் பேச்சுவார்தையை நடத்தி முடித்து விட்டதாகவும் நாளை தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து ஆகிவிடும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.