ரகசிய வாக்கெடுப்பு: திமுக-ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கம்

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

ஓபிஎஸ் அணியின் கொறடாவை பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் முழக்கம் செய்கின்றனர்.
அதே நேரத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணியினர் முழக்கம் இடுகின்றனர். இந்த அணிக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏக்களும் முழக்கமிடுகின்றனர்.
வாக்கெடுப்பு இன்னும் ஒருசில நிமிடங்களில் நடைபெறவுள்ள நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத்தில் முழக்கமிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் அனுமதிப்பாரா? என்பது இன்னும் ஒருசில நிமிடங்களில் தெரிந்துவிடும்

More News

முதல்வர் உரை தொடங்கிய அடுத்த நிமிடம் அமளி துமளி. சட்டசபையில் பரபரப்பு

பெரும் பரபரப்புக்கு இடையே தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் சற்றுமுன் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது, இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலில் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.

கூவத்தூர் விடுதி மூடப்பட்டது. எங்கே தங்குவார்கள் எம்.எல்.ஏக்கள்

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுபில் கலந்து கொள்வதற்காக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் இருந்து வெளியே வந்தனர்.

மீண்டும் தள்ளுமுள்ளு. 2வது முறையாக சட்டசபை ஒத்திவைப்பு

இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக கூடிய சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பை இன்னொரு நாளில் நடத்த கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.எல்.ஏ. பெரும் பரபரப்பு

ரகசிய வாக்கெடுப்பு என்பதில் ஓபிஎஸ் அணி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் உறுதியாக இருப்பதால் இன்று வாக்கெடுப்பு நடத்த முடியாத சூழ்நிலை சட்டமன்றத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

காவலர்களுடன் தள்ளுமுள்ளு செய்யும் திமுக எம்.எல்.ஏக்கள்

இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக கூடிய சட்டமன்றம் திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமளியில் எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டனர்.