பாராஒலிம்பிக் தங்க மங்கைக்கு ஆனந்த் மஹேந்திரா வழங்கிய நெகிழ்ச்சி பரிசு!

  • IndiaGlitz, [Friday,January 21 2022]

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் இந்திய வீரர்களுக்கு ஆனந்த் மஹேந்திரா எப்போதும் விலையுயர்ந்த கார்களை பரிசாக வழங்கி அசத்திவருகிறார். அந்த வகையில் இந்தியாவில் முதல்முறையாக பாரா ஒலிம்பிக் பிரிவில் தங்கம் வென்ற பெண்மணிக்கு அவர் பிரத்யேக பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இது பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவனி லெகரா துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். 10 மீட்டர் ஏர்ரைபிள் எஸ்.எம்.1 பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் தங்கம் இது என்பதால் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்தது. அதேபோல அவனி 10 மீட்டர் ஸ்டாண்டிங் எஸ்.எச்.1 பிரிவில் 249.6 புள்ளிகளைப் பெற்று அசத்தினார். இதுவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற அவனி லெகராவிற்கு கார் பரிசளிப்பதாக ஆனந்த் மஹிந்திரா வாக்களித்து இருந்தார். இதனால் அவனி இயக்கும் வகையில் பிரத்யேகமாக எஸ்.யூ.வி.700 கோல்ட் எடிசன் காரை பிரத்யேகமாக உருவாக்கித் தற்போது அவனிக்கு பரிசளித்துள்ளார். இதையடுத்து ஆனந்த் மஹிந்திரா மற்றும் தனக்காகவே பிரத்யேகமாக காரை உருவாக்கிய குழுவிற்கும் அவனி நன்றி தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா நேரத்தில் YouTube பார்த்து விமானம் தயாரித்த இந்தியக் குடும்பம்!

இங்கிலாந்தில் வசித்துவரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தியர் ஒருவர் கொரோனா நேரத்தைப் பயனுள்ளதாக

சினிமா பிரபலம் துல்கர் சல்மான், சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று!

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு

19 வயதில் உலகை தனியாகச் சுற்றிவந்த பைலட் சிறுமி… மைல்கல் சாதனை!

19 வயது பைலட் சிறுமி ஒருவர் உலகம் முழுவதும் தனியாக அதுவும் சிறியரக விமானத்தில் சுற்றிவந்துள்ளார். இதனால் 2 கின்னஸ்

இன்ஸ்டாவில்  சாதனை… டான்ஸ் ஆடி பார்டி பண்ணிய நடிகை சன்னிலியோன்!

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திரமாக வலம்வரும் நடிகை சன்னிலியோனுக்கு இந்தியா முழுக்கவே ரசிகர் பட்டாளம் ஏராளம்.

இன்ஸ்டாவை தெறிக்கவிட்ட நடிகை அமலாபால்… வேறலெவல் புகைப்படம் வைரல்!

இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான “மைனா“ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அமலாபால்.