நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்

  • IndiaGlitz, [Sunday,March 29 2020]

தமிழ் திரைப்பட நடிகையும் கிராம பாடல்களை பாடும் பாடகியுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83 

கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மா, அதன்பின் திரையுலகினரின் நிதி உதவியால் குணமாகி வீடு திரும்பினார். 
இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்ற தகவல் வெளிவந்துள்ளது

விக்ரம் நடித்த தூள் படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல’ என்ற பாடலை பாடி தமிழகம் முழுவதும் பிரபலமான பரவை முனியம்மா, அதன் பின்னர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் இவர் பாடல்களை பாடி மகிழ்வித்து உள்ளார். இவரது கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கெளரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது