close
Choose your channels

11 வயது மகனை கொன்று தற்கொலை செய்த பெற்றோர்: திடுக்கிடும் காரணம்!

Monday, December 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தஞ்சை அருகே 11 வயது மகனை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை அருகே மேலவெளி என்ற பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு மனைவி மற்றும் பதினொரு வயது மகன் உள்ளார். இந்த நிலையில் ராஜா உள்ளூரில் டீக்கடை ஒன்றை வைத்துக் கொண்டே ரியல் எஸ்டேட் தொழில் செய்து உள்ளார். இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் அவருக்கு மிகப்பெரிய நஷ்டம் அடைந்து உள்ளதாகவும் இதனை அடுத்து அவருக்கு கடன் தொல்லை அதிகமானதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து ராஜா தனது சொத்துக்கள் மற்றும் நகைகளை விற்று ஓரளவுக்கு கடனை அடைத்த போதிலும் கடன்காரர்கள் நெருக்குதல் காரணமாக அவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து ராஜா தனது சகோதரருக்கு போன் மூலம், ‘கடன் தொல்லை அதிகமாகி விட்டதால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறோம்’ என்று வாட்ஸ்அப்-இல் குரல் மூலம் செய்தி அனுப்பி விட்டு, 11 வயது மகனை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு ராஜா மற்றும் அவரது மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

வாட்ஸ்அப் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்க்கும்போது மூன்று பேரும் பிணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் பிணத்தையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் தொல்லை காரணமாக பதினோரு வயது மகனை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos