11 வயது மகனை கொன்று தற்கொலை செய்த பெற்றோர்: திடுக்கிடும் காரணம்!

  • IndiaGlitz, [Monday,December 06 2021]

தஞ்சை அருகே 11 வயது மகனை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை அருகே மேலவெளி என்ற பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு மனைவி மற்றும் பதினொரு வயது மகன் உள்ளார். இந்த நிலையில் ராஜா உள்ளூரில் டீக்கடை ஒன்றை வைத்துக் கொண்டே ரியல் எஸ்டேட் தொழில் செய்து உள்ளார். இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் அவருக்கு மிகப்பெரிய நஷ்டம் அடைந்து உள்ளதாகவும் இதனை அடுத்து அவருக்கு கடன் தொல்லை அதிகமானதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து ராஜா தனது சொத்துக்கள் மற்றும் நகைகளை விற்று ஓரளவுக்கு கடனை அடைத்த போதிலும் கடன்காரர்கள் நெருக்குதல் காரணமாக அவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து ராஜா தனது சகோதரருக்கு போன் மூலம், ‘கடன் தொல்லை அதிகமாகி விட்டதால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறோம்’ என்று வாட்ஸ்அப்-இல் குரல் மூலம் செய்தி அனுப்பி விட்டு, 11 வயது மகனை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு ராஜா மற்றும் அவரது மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

வாட்ஸ்அப் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்க்கும்போது மூன்று பேரும் பிணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் பிணத்தையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் தொல்லை காரணமாக பதினோரு வயது மகனை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

More News

ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை: நயன்தாராவின் அடுத்த பட இயக்குனரின் பதிவு!

நயன்தாராவின் அடுத்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு வழக்கம்போல் ஒரு எச்சரிக்கை என அந்த படத்தின் இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'மாநாடு' படத்திற்கு எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அழைத்து சென்ற கலெக்டர்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படத்திற்கு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி அழைத்துச் சென்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

கேப்டன் பதவியேற்ற பாவனிக்கு இதுதான் தண்டனை: அக்சரா தந்த அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்களை, கேப்டன் பதவியை ஏற்கவிடாமல், தனது நாணயத்தின் சக்தி மூலம் கேப்டன் ஆகி வரும் நிகழ்வுகள்

சூர்யாவின் அடுத்த படத்தில் வேற லெவல் பாடலை பாடிய அனிருத்!

சூர்யாவின் அடுத்த படத்தில் வேற லெவல் பாடலொன்றை இசையமைப்பாளர் அனிருத் பாடி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

ரம்யா பாண்டியனின் அடுத்த படத்தை தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்!

குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தை சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.