கொரோனாவுக்கு பலியான 9 மாத குழந்தையின் உடலை வாங்க மறுத்த தந்தை: அதிர்ச்சி காரணம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது ஒன்பது மாத குழந்தை திடீரென உயிரிழந்ததை அடுத்து அந்த குழந்தையின் உடலை வாங்க அக்குழந்தையின் தந்தை மறுத்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரது 9 மாத குழந்தை திடீரென கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த குழந்தை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 26ஆம் தேதி அந்த குழந்தை இறந்து விட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் குழந்தையின் உடலை கேட்டு கடந்த 3 நாட்களாக அக்குழந்தையின் தந்தை எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் கொரோனாவால் இறந்த குழந்தையின் உடலை ஒப்படைப்பதில் பல்வேறு நடைமுறைகள் இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது

இந்த நிலையில் தற்போது குழந்தையின் உடலை பெற்றுக் கொள்ளுங்கள் என மருத்துவர் மருத்துவமனை நிர்வாகம் அக்குழந்தையின் தந்தையிடம் கூறிய போது அந்த குழந்தை உடலை வாங்க தந்தை மறுத்து விட்டார். தான் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்திருப்பதாகவும் கடந்த 3 நாட்களாக தான் கொண்டு வந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதால் தற்போது குழந்தையின் உடலை வாங்கிக் கொண்டு இறுதி சடங்கு செய்யவோ அல்லது உடலை உத்தரப்பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லவோ தன்னிடம் பணம் இல்லை என்றும் அதனால் குழந்தையின் உடலை மருத்துவமனை நிர்வாகமே இறுதி சடங்கு செய்து விடும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

More News

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக காண்டம் கொடுத்த அரசு: ஏன் தெரியுமா?

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி, தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து வீடு திரும்பும்போது அவர்களுக்கு அரசே இலவசமாக காண்டம்கள் கொடுத்து அனுப்பிய தகவல்

மணமகனுக்கு கொரோனா: கடைசி நேரத்தில் திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது.

இன்னொரு பேரழிவு!!! அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 பேர் உயிரிழப்பு!!! அதிர்ச்சி தகவல்!!!

வட இந்தியாவில் ஏற்பட்ட ஆம்பன் புயலின் தாக்கமே இன்னும் சரி செய்யப்படாத நிலையில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது

மும்பை: கடந்த இரண்டு வாரங்களில் 4 மடங்காக அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்!!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அமெரிக்காவில் 7 ஆவது நாளாக தொடரும் கறுப்பினத்தவர் போராட்டம்!!!  இராணுவத்தை அழைத்து இருக்கும் அதிபர் ட்ரம்ப்!!!

அமெரிக்காவின் மிணசோட்டா மகாணத்தில் மினியா காவல் நிலையப் பகுதியில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் காவல் துறையினரால் விசாரிக்கப்படும் போது உயிரிழந்தார்.