கமல்-ரஜினி நாயகியுடன் நடிக்கும் பார்த்திபன்

  • IndiaGlitz, [Wednesday,July 12 2017]

உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த 80களின் கனவு நாயகி ஜெயப்ரதா மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு தமிழ் படத்தில் நடிக்கின்றார். 'கேணி' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பார்த்திபனும் நடிக்கவுள்ளார்.

இதுவொரு பீரியட் படம். கடந்த 1956ஆம் ஆண்டு கேரள மாநிலம் உருவானபோது தமிழ்நாடு, கேரளா ஆகிய இருமாநில எல்லையில் உள்ள கிணறு ஒன்று யாருக்கும் சொந்தம் என்ற பிரச்சனை எழுகிறது. அந்த பகுதி மக்களின் தண்ணீர்தேவையை பூர்த்தி செய்யும் இந்த கிணறு குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணுவதுதான் இந்த படம். இந்த கிணறு இருக்கும் வீட்டின் உரிமையாளராக ஜெயப்ரதாவும், இந்த பிரச்சனையை தீர்க்க உதவும் முக்கிய கேரக்டரில் பார்த்திபனும் நடித்து வருகின்றனர்.

பிரபல மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாத் இயக்கும் இந்த படத்தில் நாசர், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை தற்போதைய முல்லை பெரியாறு பிரச்சனையை ஞாபகப்படுத்துவதாக இருக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ஜெயப்ரதாவுடன் நடிப்பது குறித்து பார்த்திபன் கூறுகையில், 'எனது குருநாதர் கே.பாக்யராஜ், 'ஒரு கைதியின் டைரி' படத்தின் இந்தி ரீமேக் படம் 'ஆக்ரி ரஸ்தா' படத்தில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். அந்த படத்தில் அமிதாப் மற்றும் ஜெயப்ரதா நடித்திருந்தனர். அதற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஜெயப்ரதாவுடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சி என்று கூறினார்.

More News

உதயநிதி-பிரியதர்ஷன் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படம் ஒன்றின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது...

குடும்பக்கட்டுப்பாடு செய்தால் 4G ஸ்மார்ட்போன்: அரசின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போகிறது. இப்படியே போனால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் வந்துவிடும்போல் தெரிகிறது...

பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை: பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியவுடன் அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய நேற்று சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் கொண்ட குழு நேர்காணல் நடத்தியது.

இன்று சென்னையில் 1000% மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வந்தது. நிலத்தடி நீர் இல்லாமல் குடிநீர் தேவைக்கே மக்கள் திண்டாடி வரும் நிலையில் நேற்று முன் தினம் இரவு சென்னையில் நல்ல மழை பெய்து பூமியை குளிர வைத்தது

நானும் விஜய்சேதுபதியும் ஒன்றுமில்லாமல் வந்தவர்கள். இளையராஜா

சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா, விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.